பொன். மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

பொன்.மாணிக்கவேல், ஓய்வு பெறும் நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐ.ஜி. பொன். மாணிக்கவேலின் பதவி நீட்டிப்பை எதிர்த்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை, சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Exit mobile version