நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் – முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!

நிதிநிலை அறிக்கையில், திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் குற்றம்சாட்டி உள்ளார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன், கடந்த அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை கட்டுக்குள் இருந்ததாகவும், தற்போதுள்ள விடியா அரசு வருவாய் பற்றாகுறையை அதிகரித்துள்ளதாகவும், அதை நிதியமைச்சர் ஏன் பெருமையாக பேசுகிறார் எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் திமுக அரசின் தோல்வியை நிதி அமைச்சர் மூடி மறைத்துள்ளார் என தெரிவித்தார். அப்போது பேசிய எதிர்கட்சித் தலைவர், கடந்த அதிமுக ஆட்சியில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பேச ஒரு மணி நேரம் வாய்ப்பளித்ததாகவும், தற்போது குறைந்த அளவிலான நேரம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

Exit mobile version