திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, குடியாத்தம் திமுக உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் காலமானாதால் அந்த தொகுதிகள் காலியாக உள்ளதென சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அனுப்பியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், 2021 பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளதால் மத்திய அரசிடம் ஆலோசித்து இந்திய தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்குமென அவர் கூறினார்.

அடுத்த 6 மாத காலத்திற்குள் காலியான தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்கிற விதி உள்ள நிலையில், இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version