முதல் காதலனை கொலை செய்ய 2-வது காதலனை ஏவிய காதலி

திருவண்ணாமலையில் காதலியின் பேச்சைக் கேட்டு, அப்பெண்ணின் முதல் காதலனை கொன்ற இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முள்ளிப்பட்டு ஏரிக்கரை அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், முள்ளிப்பட்டை சேர்ந்த அஜித்குமார் என்பவர், கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரனிடம், சுரேஷை கொலை செய்தது தான் தான் என சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து சுரேஷிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலை செய்யப்பட்ட சுரேஷும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணியும் கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென கிருஷ்ணவேனி, சுரேஷிடம் பேசுவதை நிருத்திவிட்டு அஜித்குமாரிடம் பேசி வந்துள்ளார். இதனால் கிருஷ்ணவேனிக்கும், சுரேசிற்கும் மோதல் ஏற்பட, கிருஷ்ணவேனியும், அஜித்குமாரும் சேர்ந்து சுரேஷை கொல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி சுரேஷை தனியாக அழைத்து சென்று அவரை கட்டையால் தாக்கியும், கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக அஜித்குமார் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள கிருஷ்ணவேனியை தேடி வருகின்றனர்.

Exit mobile version