காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்

திருப்பூரில் 7 ஆண்டுகள் காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த கனகலிங்கம் என்பவரும் 7 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனகலிங்கத்திற்கு வேறு பெண்ணுடன் நிச்சயம் ஆனதை அறிந்த வேலம்மாள் தன்னை ஏமாற்றிய கனகலிங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version