திருப்பூரில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

திருப்பூரில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அதிமுக அரசின் 47ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தீபா பேரவையில் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

 

Exit mobile version