திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம்

திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க  எம்.எல்.ஏ.   ஏ.கே. போஸ், மதுரை ஜெய்ஹிந்புரம் ஜீவா நகரில் வசித்து வந்தார். நேற்றிரவு உறங்கி கொண்டிருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். இருப்பினும், போஸ் வழியிலேயே  உயிரிழந்தார். கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 2011ஆம் ஆண்டு மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு போஸ் வெற்றி பெற்றார். கடந்த 2016ஆம் ஆண்டு நடை பெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு போஸ் வெற்றி பெற்றார்.

Exit mobile version