தேர்தலில் போட்டியிடுவதில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்துக்கு சிக்கல்?

துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் 2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில் முதல் கட்டமாக 10 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி மற்றும் சிமெண்ட் குடோனில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக சாக்கு மூட்டை மற்றும் அட்டைப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் பேப்பர்களால் சுற்றப்பட்டு வார்டு வாரியாக எண்கள் எழுதப்பட்டு, வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டு இருக்கிறது.வாக்காளர் பட்டியலும், வார்டு வாரியாக வாக்காளர்கள் பெயர்கள் கொண்ட லிஸ்டும் பணத்தோடு இணைக்கப்பட்டு பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்த தொடர் சோதனையின் நீட்சியாக துரைமுருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்து வருகின்றனர். அதேப்போல் இந்த சோதனையில் பெண் வாக்காளர்களுக்காக விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டு இருந்த 30 கிலோ தங்க காசுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதிக அளவு பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டு இருப்பதால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக இருக்கும் கதிர்ஆனந்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு புறம் தன் தந்தையின் வீட்டில் ரெய்டு, மறுபுறம் தன்னுடைய கல்லூரியில் ரெய்டு என தொடர்ந்து வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர் . இதனால் சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு பணம் அதிகஅளவில் விநியோகிக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் இந்த தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version