சாத்தூரில் 2 மணி நேரமாக பெய்த இடியுடன் கூடிய கனமழை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இரண்டு மணி நேரமாக பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக மழை இன்றி விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது. இந்தசூழலில் இடியுடன் கூடிய கனமழை சுமார் இரண்டு மணி நேரமாக இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Exit mobile version