சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று இளைஞர்கள் கைது

நாகையில் 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மூன்று இளைஞர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் காடம்பாடி பகுதியைச் சேர்ந்த சிறுமி, கடந்த சில நாட்களாக மாயமான நிலையில், தன் மகளை கண்டுபிடித்து தரக்கோரி சிறுமியின் பெற்றோர் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், அந்த சிறுமி, தான் வேளாங்கண்ணியில் இருப்பதாகவும், தன்னை சிலர் தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியை மீட்ட காவல்துறையினர், வழக்கு தொடர்பாக விஜய், அரவிந்த், பிரதீப் ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். அவர்கள் மூவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version