சொத்துக்களை பெற்றுக் கொண்டு தந்தையை துரத்திய மகன்கள்

திருவாரூர் அருகே சொத்துக்களை பிரித்துக் கொடுத்த பின்னர் பிச்சை எடுக்க வைத்த 3 மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அதம்பார் என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ். இவர் தனது மகன்களான உதயகுமார், மணிகண்டன், ரமேஷ் ஆகிய 3 பேருக்கும் சில வருடங்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலங்களை சமமாக பிரித்து கொடுத்துள்ளார்.

சொத்துக்களை பெற்றுக்கொண்ட 3 மகன்களும் தந்தை கோவிந்தராஜனை அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. கடந்த 3 வருடங்களாக பிச்சை எடுத்து உணவு சாப்பிட்ட கோவிந்தராஜ், மகன்களிடம் சென்று தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார். மூன்று மகன்களும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் வயதான காலத்தில் தன்னை பார்த்துகொள்ளாமல் அடித்து துன்புறுத்தும் மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தனது சொத்துக்களை மீட்டு தரக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கோவிந்தராஜ் மனு அளித்தார். இச்சம்பவம் அப்பகுதியினரை கண்கலங்க வைத்தது.

Exit mobile version