இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை திருடிய மூன்று நபர்கள்

திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை மூன்று பேர் திருடும் வீடியோ காட்சியை வைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள எழிலூர் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. மாத சீட்டு பணம் கட்ட திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடகு வைத்து முப்பது ஆயிரம் ரூபாயை பணத்தை தனது இரு சக்கர வாகனத்தில் அவர் எடுத்து வந்துள்ளார். மருந்தகம் ஒன்றில் வண்டியை நிறுத்திவிட்டு அவர் மருந்து வாங்கிகொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பான CCTV காட்சியினை கொண்டு திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version