News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

தூத்துக்குடி – பள்ளியின் கழிவறையை மாணவர்களைச் சுத்தம் செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர்!

Web Team by Web Team
January 19, 2023
in செய்திகள், தமிழ்நாடு, துத்துக்குடி, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தூத்துக்குடி – பள்ளியின் கழிவறையை மாணவர்களைச் சுத்தம் செய்யச் சொன்ன தலைமை ஆசிரியர்!
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் அருகே உள்ளது கிளவிப்பட்டி என்கிற கிராமம். அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் லீலா ஜோதிலட்சுமி என்பவர், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களை பள்ளியின் கழிவறை மற்றும் பள்ளி வளாகத்தையையும் சுத்தம் செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவியர்கள் தலைமை ஆசிரியரை எதிர்த்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தத் தகவலின் படி, ‘ தலைமை ஆசிரியர் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்கிறார், அவர் கழிவறைக்கு செல்வதற்கு எங்களை தண்ணீர் கொண்டுவரச் சொல்கிறார், அவரின் பேச்சைக் கேட்கவில்லை என்றால் தாகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டுகிறார்’ என்று கூறினார். மேலும் அந்த மாணவி கூறியதாவது, ’பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய சொல்வதோடு மட்டுமல்லாமல் மரக் கன்றுகளை நடுவதற்கு பள்ளியிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து மண்ணை அள்ளிவரச் சொல்கிறார் என்று தெரிவித்தார்.

மாணவ, மாணவியர்களின் போராட்டத்தை அறிந்துகொண்ட மாவட்ட கல்வி அலுவலர், தாசில்தார் மற்றும் காவல்துறையினர் கிளவிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கே குழுமியிருந்த மாணவர்களிடமும் பள்ளி ஆசிரியர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக சலசலப்புகள் கட்டுக்குள் வந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியர்களும் சுமூகமாக கலைந்து சென்றார்கள். தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பாடம் நடத்த வேண்டிய ஆசிரியரே இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது கொடுமையானது.

Tags: government school studentstudents protestthoothukkuditoilet cleanuntouchability
Previous Post

கன்னியாகுமரி மாவட்டம் – அரசு போக்குவரத்து கழக திமுக தொழிற்சங்க நிர்வாகிகளின் அராஜகத்தை கண்டித்து அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

Next Post

என்.எல்.சி விவகாரம் : விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விடியா அரசு!

Related Posts

மர்மநபர்கள் கைவரிசை…வணிகர்கள் அச்சம் !
தமிழ்நாடு

மர்மநபர்கள் கைவரிசை…வணிகர்கள் அச்சம் !

February 4, 2023
ரூ.5,40,000 நிதியில் சாலை போடப்பட்டதாக ஆர்டிஐயில் தவறான தகவல்!
தமிழ்நாடு

ரூ.5,40,000 நிதியில் சாலை போடப்பட்டதாக ஆர்டிஐயில் தவறான தகவல்!

February 2, 2023
பேஸ் மட்டம் ஸ்ட்ராங்கு.. பில்டிங் வீக்கு..பயமா இருக்கு சார்.. மக்கள் பரபர புகார்..!
தமிழ்நாடு

பேஸ் மட்டம் ஸ்ட்ராங்கு.. பில்டிங் வீக்கு..பயமா இருக்கு சார்.. மக்கள் பரபர புகார்..!

February 2, 2023
கனிமொழி கலந்து கொண்ட நிகழச்சிக்காக மின்சாரம் திருடிய உடன்பிறப்புகள்!
அரசியல்

கனிமொழி கலந்து கொண்ட நிகழச்சிக்காக மின்சாரம் திருடிய உடன்பிறப்புகள்!

January 29, 2023
காதல் திருமணம் செய்து பெற்றோரை தவிக்கவிட்ட பாசமிகு மகள் பெற்றோர் விபரீத முடிவு!
தமிழ்நாடு

காதல் திருமணம் செய்து பெற்றோரை தவிக்கவிட்ட பாசமிகு மகள் பெற்றோர் விபரீத முடிவு!

January 25, 2023
குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழ்நாடு

குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

January 20, 2023
Next Post
என்.எல்.சி விவகாரம் : விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விடியா அரசு!

என்.எல்.சி விவகாரம் : விவசாயிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய விடியா அரசு!

Discussion about this post

அண்மை செய்திகள்

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

உலகிலேயே மிகப் பெரிய முத்துமலை முருகன்!

February 6, 2023
பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

பயங்கர நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு..துவண்டு கிடைக்கும் துருக்கி!

February 6, 2023
வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

வெளிநாடுவாழ் இந்தியர்களின் தங்கும் காலத்தை 182 நாட்களாக உயர்த்த வேண்டும்! – இன்போசிஸ் நிறுவனர்!

February 6, 2023
9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

9.8 லட்சம் காலிப்பணியிடங்கள்…மத்திய அரசு துறைகளில்…!

February 6, 2023
துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

துருக்கியில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக நிலநடுக்கம்! – 1300 பேர் இறப்பு!

February 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version