இந்திய பிரதமரை திருடன் என அழைப்பது இதுவே முதல்முறை – ராகுல் காந்தி

பிரான்ஸ் அதிபர் ஒருவர், இந்திய பிரதமரை திருடன் என்று கூறுவது இதுவே முதல்முறை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக பேசியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோகர்க் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர், ரஃபேல் முறைகேடு குறித்து பேசினார்.

அப்போது, ராணுவ விமான தயாரிப்பில் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து அனில் அம்பானியின் பையில் பிரதமர் மோடி வைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்திய பிரதமர் ஒருவரை பிரான்ஸ் அதிபர் திருடன் எனக் கூறுவது இதுவே முதல்முறை என்று பேசிய ராகுல்காந்தி, இது வெட்கப்பட வேண்டிய செய்தி என்றார்.

Exit mobile version