சிதம்பரம் தொகுதி வெற்றி கவலை அளிப்பதாக திருமாவளவன் பேச்சு

சிதம்பரம் தொகுதியில் பெற்ற வெற்றி துளியளவும் மகிழ்ச்சியளிக்கவில்லை என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய, கிறிஸ்துவர்களை தவிர இந்துக்கள் வாக்களிக்கவில்லை என்று சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது சிதம்பரம் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய திருமாவளவன், தற்போது இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version