வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திருமாவளவன்

சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் வீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, திருமா தன்னை சந்தித்தது புதுமை அல்ல என்றும், வன்னியரசு தன்னை தவறாக புரிந்து கொண்டதால் தங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறினார்.

Exit mobile version