திருச்சியில் ஒரு கோடி ரூபாய் கொள்ளை வழக்கில் 5 பேர் கைது

தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி, பாலக்கரையில் முருகேசன் என்பவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சென்னையில் அவருக்கு தெரிந்த நண்பர்களிடம் இருந்து 1 கோடி பணத்தை பெற்று, சுந்தரேசன், மதியழகன், ஆம்னி பேருந்து ஒன்றில் திருச்சி வந்துள்ளனர். அப்போது அவர்களைத் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், அவர்களைத் தாக்கிவிட்டு ஒரு கோடி பணத்தை பறித்து சென்று விட்டனர். இது குறித்து, திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், சுந்தரேசன், மதியழகன் வந்த ஆம்னி பேருந்தை கார் ஒன்று பின் தொடர்ந்து வந்ததை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். அந்த கார் நம்பரைக் கொண்டு, குற்றவாளிகள் அப்துல் இஸ்மாயில், முகம்மது ரபிக், ஜாகிர் உசேன், முகம்மது சமீர், சாகுல் அமீது ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயையும், இரண்டு பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Exit mobile version