மூன்றாவது அணி திட்டத்தை விரைவில் அறிவிப்பேன் – சந்திரசேகர ராவ்

பா.ஜ.க – காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்க தொடர்ந்து முயற்சிக்க உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்த பிறகு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

தெலங்கானா தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று முதலமைச்சர் ஆகியுள்ள சந்திரசேகர ராவ் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக மாநில கட்சி தலைவர்களை வரிசையாக சந்தித்து வருகிறார். நேற்று முன்தினம் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்த அவர், நேற்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் – பா.ஜ.க இல்லாத கூட்டணியை அமைக்க பாடுபடுவதாகவும், அதற்கான மூன்றாவது அணி திட்டத்தை விரைவில் அறிவிக்க இருப்பதாக கூறினார்.

Exit mobile version