கர்ப்பப்பை எடுத்தா தான் உயிர் பிழைக்க முடியும்னு சொல்லிட்டாங்க!

நாகியம்பட்டியை சேர்ந்த நவநீத குமார் என்பவரது மனைவி மஞ்சு என்பவருக்கு, கடந்தாண்டு தம்மம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஆத்தூர் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பிரசவித்த சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து மஞ்சுவின் உயிரை காப்பாற்ற கர்ப்பப்பை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறி, கர்ப்பப் பையை அகற்றினர். இந்நிலையில் தனக்கு தவறான சிகிச்சை அளித்ததன் காரணமாக, தனது குழந்தை இறந்ததாகவும் மேலும் கர்ப்பப்பை அகற்றப்பட்டது குறித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

Exit mobile version