தேவர் ஜெயந்திக்கு எடுத்து வரப்பட்ட தங்க கவசம் மீண்டும் வங்கியிடம் ஒப்படைப்பு

தேவர் ஜெயந்தி முடிவடைந்ததையடுத்து தேவர் தங்க கவசத்தை தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் ஒப்படைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி, குரு பூஜை விழாவின் போது தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்வது வழக்கம். அதன்படி, தேவர் ஜெயந்திக்கு எடுத்துவரப்பட்ட தங்க கவசமானது விழா முடிவடைந்ததும், பலத்த காவல்துறையினரின் பாதுகாப்புடன், பேங்க் ஆப் இந்தியா வங்கியின் அதிகாரிகளிடம் கோப்புகளில் கையெழுத்திட்டு துணை முதலமைச்சர் ஒப்படைத்தார்.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அணிவித்திருந்த தங்க கவசம் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Exit mobile version