மாசித் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.

மாசித் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான மாசித்திருவிழா கடந்த மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்  திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் உள்ளூர் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களின் வசதிக்கான குடிநீர், கழிப்பிட வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Exit mobile version