தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது அலகில் மின்உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் 2-வது அலகில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன்மூலம் நாள்தோறும் ஆயிரத்து 50 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தநிலையில் வருடாந்திர பராமரிப்பு காரணமாக இன்று முதல் 2-வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 28-ம் தேதியில் இருந்து பராமரிப்பு பணி காரணமாக 4-வது அலகில் மின் உற்பத்தி ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version