வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேல் அடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மாலை நேரங்களில் கனமழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version