உள்ளாட்சித்துறையில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை -அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

உள்ளாட்சித்துறையில் எந்த வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

நகர்ப்புற முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட இடங்களில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, முதன்மை மாநிலமாக செயல்படுவதாக கூறினார். உள்ளாட்சித்துறையில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றும், அனைத்தும் விதிகளுக்கும் உட்பட்டே செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

Exit mobile version