குடிமைப் பணி தேர்வுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

குடிமைப் பணித் தேர்வுகளுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் நிதி ஆயோக் அமைப்பு, “புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் 75” என்ற தலைப்பில் அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுக்கான பொதுப்பிரிவினரின் வயது வரம்பை 27 ஆக குறைப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், குடிமைப் பணித் தேர்வுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version