அதிமுக கூட்டணியை வெல்ல தமிழகத்தில் எந்த கட்சியும் கிடையாது -அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக கூட்டணியை வெல்ல தமிழகத்தில் எந்த கட்சியும் கிடையாது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 24மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில், 52 கோடியே 80 லட்சம் மதிப்பில் குடிநீர் மேம்பாடு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுசூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக கூட்டணியை வெல்ல தமிழகத்தில் எந்த கட்சியும் கிடையாது என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது எனவும், மக்களுக்கு தேவையான நலத்திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version