கவிமணி அரசு பள்ளியில் நடைபெற்ற 117 வகையான மலர் கண்காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில் 117 வகையான மலர் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் பல்வேறு மலர்களின் முகமூடியை அணிந்து கொண்டு மலர்களை ரசித்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பூக்கள் குறித்தும், பூக்களின் பயன்பாடு குறித்தும், மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக 117வகையான பூக்கள் சேகரிக்கப்பட்டு, வைக்கப்பட்ட,இந்த கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கண்டு ரசித்து பயனடைந்தனர்.

 

 

 

 

Exit mobile version