சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஆண்டிபட்டி ஒன்றியம் ஜக்கம்மாள்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் 12 வயது பெண் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டதால், அந்தச் சிறுமி தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில், அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்ற நபர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கருப்பசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version