சென்னை முழுவதும் விரைவில் சிசிடிவி வலையத்திற்குள் வரும்

சென்னை ராயபுரம், திருவொற்றியூர் சரகத்தில், இரண்டாயிரத்து 620 கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை, மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னை ராயபுரத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்ட கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், இன்னும் 10 நாட்களில் சென்னை மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா வலையத்திற்குள் வந்துவிடும் என்ற தெரிவித்தார்.

Exit mobile version