குஜராத்தில் வலுவிழந்த ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்தது

குஜராத் மாநிலம் ஜுனாகத் அருகே ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், அதில் சென்றுகொண்டிருந்த கார்கள் சிக்கிக் கொண்டன.

குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்த நிலையில், ஜுனாகத் அருகே மலாங்கா என்னும் ஊரில் உள்ள ஆற்றுப்பாலம் வலுவிழந்து காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் பாலத்தின் மீது வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரெனப் பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த 4 கார்கள் இடிந்த பாலத்தின் நடுவே சிக்கிக் கொண்டன. இந்த விபத்தில் வாகனங்களில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர். அதில் இருந்த அனைவரையும் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி மீட்டனர். இந்தப் பாலம் இடிந்ததால் ஜுனாகத் – முந்த்ரா இடையே வாகனப் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Exit mobile version