பாசன பகுதிகளுக்கு நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க தமிழக ஆணை – விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க தமிழக ஆணை பிறப்பித்ததற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஈரோடுமாவட்டம் பவானிசாகர் அணை மூலம் பாசன வசதி பெறக்கூடிய கீழ்பவானி,தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதியில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்தாண்டு தென்மேற்கு பருவ மழையால் பவானிசாகர் அணை முழுகொள்ளளவை எட்டியது. பாசன பகுதிகளுக்கு இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இம்மாதம் 25- ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 24- ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 40 ஆயிரத்து 247 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Exit mobile version