பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்த மாணவர்கள்

திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இடையேயான பிணைப்பை அதிகப்படுத்தும் வகையில், பெற்றோர்களுக்கு மாணவர்கள் பாதபூஜை செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவ மாணவியர், தங்கள் பெற்றோருக்கு பாதபூஜை செய்தனர். மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான இடைவெளி குறைந்து வருவதாகவும், பெற்றோருடனான பிணைப்பை அதிகப்படுத்தும் வகையில் இந்த பாதபூஜை நடத்தப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதில் 400-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள், தங்கள் பெற்றோரின் பாதங்களைக் கழுவி மலர் தூவி பூஜை செய்தனர்.

Exit mobile version