வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள அசோக் நகரில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கஜா புயல் எச்சரிக்கையையொட்டி தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். புயல் மற்றும் மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குறிப்பிட்டார்.

Exit mobile version