சைவ, அசைவ உணவுகளுக்கு ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்க உரிமை இல்லை -சென்னை உயர் நீதிமன்றம்

உணவகங்களில் சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு ஒரே மாதிரியான விலையை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அக்பர் அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மனு தாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், உணவகங்களில் சைவம் மற்றும் அசைவ உணவுகளுக்கு ஒரே மாதிரியான விலையை நிர்ணயிக்க கோருவது என்பது அரசியல் சாசனத்தில் உரிமை இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Exit mobile version