மூன்று மாவட்ட மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு

அத்திக்கடவு- அவினாஷி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்ட உள்ள தமிழக முதல்வருக்கு அத்திக்கடவு அவினாசி போராட்டக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஐம்பது லட்ச மக்களின் வாழ்வாதாரமாக உள்ள இத்திட்டத்திற்கு தமிழக முதல்வர் பிப்ரவரி 28 ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அத்திக்கடவு – அவினாஷி போராட்டக் குழுவினர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக செயல்படுவோம் என்று தெரிவித்தனர்

Exit mobile version