சந்தியாவின் கொலை வழக்கில் உறவினர்களிடம் விசாரணை நடத்த திட்டம்

சந்தியாவின் கொலை வழக்கில் பள்ளிக்கரணை தனிப்படை போலீசார் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கணவரால் கொல்லப்பட்ட சந்தியாவின் இரண்டு கால்கள் மற்றும் வலது கை பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் கடந்த மாதம் 21 ஆம் தேதி கிடைத்தது. அதேபோன்று கடந்த 6 ஆம் தேதி ஈக்காட்டுத்தாங்கல் கூவம் பகுதியில் கொலையாளி பாலகிருஷ்ணன் அடையாளம் காட்டிய இடத்தில் மேலும் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். தற்போது பள்ளிக்கரணை தனிப்படை போலீசார் சந்தியாவின் கன்னியாகுமரி வீடு, பாலகிருஷ்ணனின் தூத்துக்குடி வீடு மற்றும் உறவினர்களிடம் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சந்தியாவின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் மாதிரிகளை கொண்டு டி.என்.ஏ சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Exit mobile version