புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாதது வருத்தம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடாதது வருத்தம் அளிப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 18 கோடி ரூபாய் மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது, கஜா புயல் மிகப் பெரிய பேரிடர் என்றும் ஆனால், அதனை மத்திய அரசு பாராமுகத்துடன் பேரிடர் என அறிவிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகள் கஜா புயல் பாதிப்பு பற்றி பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.

Exit mobile version