முதன்மை மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அரசுப் பள்ளி

தேனி மாவட்டத்தின் முதன்மை மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருத்த சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்டத்தின் முதன்மை மாதிரிப் பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிக்காக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் கல்வி மற்றும் ஒழுக்கம் என அனைத்திலும் முதன்மை வகித்து வரும் இந்த பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் அதிக ஆர்வம் காட்டி வருவதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். மேலும், இங்கு கல்வி மட்டும இன்றி சிலம்பம், விளையாட்டு என அனைத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால், இந்த பள்ளிக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version