பூக்களின் விலை பல மடங்கு உயர்வு

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல்லில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது…

நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதால் திண்டுக்கல் மாநகராட்சி அண்ணா பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. வெள்ளோடு, பஞ்சம் பட்டி, சின்னாளபட்டி, சிறுநாயக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விளையும் பூக்கள், விற்பனையாகும் இந்தப் பூ மார்கெட்டில், கடந்த வாரத்தை விட விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, கனகாம்பரம் கிலோ ஒன்று 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. மல்லிகைப்பூ கிலோ ஆயிரம் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. முல்லைப்பூ, ஜாதிப்பூ உள்ளிட்டவற்றின் விலையும் பனமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version