வடதமிழகத்தில் 15, 16 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்

வங்கக்கடலில், சென்னையில் இருந்து 930 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால், வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 15,16 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், வரும் 17ம் தேதி ஓங்கோல்-காக்கிநாடா இடையே புயல் கரையை கடக்கும் என்றும் கூறினார்

 

 

Exit mobile version