டிசம்பர் 4-ம் தேதி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

டிச.4-ம் தேதி தமிழகம், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய கிழக்கு திசை காற்று வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கடக்க உள்ளது. இதனால் டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கிழக்கு திசை காற்றின் வேகம் மற்றும் அது செல்லும் திசை மாறுபடுவதாக ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version