பவர் ஸ்டார் சீனிவானின் மனைவியை கடத்தியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்

பவர் ஸ்டார் சீனிவானின் மனைவியை கடத்தியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் நடிகர் பவர் ஸ்டார் மற்றும் அவரது மனைவி ஜீலியை சிலர் கடத்தியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், சீனிவாசன் வீடு திரும்பினார்.

இதனிடையே தனது மனைவியை சிலர் கடத்தி ஊட்டியில் அடைத்து வைத்திருப்பதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். இந்தநிலையில், ஊட்டியில் ஜூலியை மீட்ட போலீசார், அவரை கடத்திய 6 பேரை கைது செய்தனர்.

பெங்களூரை சேர்ந்த ஆலம் என்பவரிடம் சீனிவாசன் வாங்கிய 90 லட்சம் ரூபாயை தருமாறு கேட்டதாகவும், இதுதொடர்பாக ஜூலி கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version