பாம்பன் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை கண்டித்து பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர்.

பாம்பன் தெற்கு கடல் பகுதியிலிருந்து மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 5 பேரை கடந்த 22ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதனால் அதிருப்தியடைந்த பாம்பன் மீனவர்கள், இலங்கை கடற்படையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கியுள்ளனர். இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நங்கூரமிட்டுள்ளன. மேலும் இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version