ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி நவ்ஷேரா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.

புல்வாமா தாக்குதலையடுத்து, தொடர்ந்து பாதுகாப்பு படை, தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய விமானப்படை நிகழ்த்திய குண்டுவீச்சு தாக்குதலில், தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ரஜோரி நவ்ஷேரா செக்டார் பகுதியில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து நடைபெற்றுவரும் பதிலடி தாக்குதல்களால் எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version