எதிர்க்கட்சிகளின் கூட்டணி எடுபடாது – அமைச்சர் ஜெயக்குமார்

எதிர்க்கட்சிகள் என்னதான் வலுவான கூட்டணி அமைத்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாரதியாரின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்று சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 2016ஆம் ஆண்டு தேர்தலில் திமுக பல கட்சிகளை திரட்டி கூட்டணி அமைத்தபோதும் மக்கள் அதிமுகவை தான் வெற்றிபெற செய்தனர் என குறிப்பிட்டார்.

Exit mobile version