தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில், மேலும் தாமதம் ஏற்படும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உருவான புயல் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பாக வீசக்கூடிய காற்றானது, தெற்கு வங்க கடல் மற்றும் இலங்கை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலவுவதாக தெரிவித்தார்.

எனவே, 5 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று அவர் கூறினார். மன்னார் வளைகுடா பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவித்த பாலச்சந்திரன், இதனால் தென் தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறினார்.

Exit mobile version