மனிநேயமற்று திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்: சிசிடிவி காட்சி

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் அருகே லாட்டரி விற்று கொண்டிருந்த பார்வையற்ற நபரிடம் இருந்த லாட்டரி டிக்கெட்டுகளை மர்ம நபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தம்பனூர் பேருந்து நிலையத்தின் நடைமேடை ஓரத்தில் நின்று கொண்டிருக்கும் பார்வையற்ற நபரிடன் கையில் லாட்டரிகளை அவருக்கு தெரியாமல் எடுக்கும் ஒருவர், பின்னர் லாட்டரியை வாங்குவது போல் நடித்து அங்கிருந்து சுற்றி முற்றி பார்த்துவிட்டு கிளம்புகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், லாட்டரி டிக்கெட்டுகளை திருடும் நபரை தேடி வருகின்றனர்.

Exit mobile version