பிரபல ரவுடியை கொலை செய்ய கத்திகளுடன் சுற்றிதிரிந்த மர்மகும்பல் கைது

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடியை கொலைசெய்ய திட்டமிட்டு பட்டா கத்திகளுடன் சுற்றிதிரிந்த 4 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனியை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். குடிசை மாற்றுவாரியத்தில் பணிப்புரிந்து வரும் இவர், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டிமிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துசென்றதாக கூறப்படுகிறது. ரஞ்சித் அளித்த புகாரையடுத்து, வியாசர்பாடி பகுதியில் புளியந்தோப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த 4 பேரை சோதனை செய்ததில், பட்டா கத்தியுடன் வந்ததும், மேலும் இவர்கள் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களை தயார் செய்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சரவணன், சிவா, கோபால், ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பட்டா கத்திகளையும் பறிமுதல் செய்தனர் .

Exit mobile version