நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை – போலீசார் விசாரணை

காஞ்சிபுரம் அருகே நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் ஊராட்சியை சேர்ந்த பார்வதி வழக்கம்போல் மாடுகளை மேய்க்க ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் பார்வதி வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், ஏரிப்பகுதிக்கு சென்றுபார்த்தபோது, பார்வதி கழுத்தறுத்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

பார்வதி அணிந்திருந்த நகைகள் மற்றும் 20 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டிசத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version