கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிகளவில் குவிந்த மக்கள்

தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வர உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளதாகவும், அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் கூறினார்.

இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இன்று மாலை வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version